×

40 வயது பெண்ணுடன் தகாத உறவு: 28 வயது வாலிபர் வெட்டிக்கொலை

திருவாரூர்: திருவாரூர் அருகே விவாகரத்தாகி 2வது கணவருடன் வசித்து வந்த பெண்ணுடன் தகாத உறவால் ஆவின் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருவாரூர் அருகே ஆந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கவிதா முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கோபி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். மலேசியாவில் தற்போது கோபி வேலை பார்த்து வருகிறார். இதனால் முதல் கணவருக்கு பிறந்த மகள், மகனுடன் கவிதா வசித்து வருகிறார். இதில் மகள் வெளியூரில் தங்கி மருத்துவம் படித்து வருகிறார். மகன் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா சேந்தங்குடி கிராமத்தை சேர்ந்த, ஆவின் பால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக உள்ள ராகுல் (28), கவிதாவின் மகனை பைக்கில் பள்ளிக்கு சென்று விடுவதும், வீட்டுக்கு அழைத்து வந்து விடுவதுமாக இருந்துள்ளார்.

அப்போது கவிதாவுக்கும், ராகுலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இதனையறிந்த கவிதாவின் உறவினரான நாகப்பட்டினம் காக்கழனியை சேர்ந்த நந்தா (எ) வீரத்தமிழன் (28), சில நாள்களுக்கு முன் ராகுல் வீட்டுக்கு சென்று அவரது தந்தை ராமச்சந்திரனிடம் கூறி மிரட்டி சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த 9ம் தேதி இரவு பணி முடிந்து ராகுல் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் திருவாரூர் அருகே, வாஞ்சியூர், பாண்டவையாற்று படித்துறை அருகே முட்புதரில் ராகுல் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. போலீஸ் விசாரணையில் ராகுல் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வீரத்தமிழன், கவிதா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

The post 40 வயது பெண்ணுடன் தகாத உறவு: 28 வயது வாலிபர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Aavin ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!